பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
விடிவை உணர்த்தி, அடியார்களிடத்தில் பேரன்பு கொண்டவரே என்று ஆழ்வார் அரங்கனை பள்ளி எளுப்புகிறார்.

இலக்கணம்: எண்சீர்க்கழிநெடியாசிரிய விருத்தம் - ராகம்: பூபாள - தாளம்: அட

மூலம்: 2. கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக்
கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ
எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம்
ஈன்பனி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி
விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய்
வெள் எயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி
அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

திருவரங்கம் | ஸ்ரீரங்கநாதன் | பள்ளி எழுந்தருளாயே | ஆனையின் அருந்துயர் கெடுத்த | அன்னம் |