பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
ஆழ்வார் எனக்கு மிக உயர்ந்த நன்மைகளைச் செய்துள்ளார் என்றும் அதற்குத் தகுதியாக என்னால் எந்த ப்ரதி உபகாரமும் செய்ய முடியாது என்றும் சொல்லி ஆழ்வார் திருவடிகளில் பேரன்பு கொள்கிறார்.

இலக்கணம்: கலிவிருத்தம் - ராகம்: ஆரபி - தாளம்: ஆதி

மூலம்: 10. பயன் அன்று ஆகிலும் பாங்கு அல்லர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன்தன் மொய் கழற்கு அன்பையே

நம்மாழ்வார் | குயில் | சோலை | நம்மாழ்வார் | நம்பி | திருவடி |